தேசிய கராத்தே மாணவர்கள் சாதனை

கூடலுார்: தேசிய அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி பாண்டிச்சேரியில் நடந்தது.

கூடலுார் பயிற்சியாளர் ரஞ்சித் தலைமையில் 17 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் அனைத்து மாணவர்களும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பயிற்சியாளர் பரமன், பெற்றோர்கள் வாழ்த்தினர்.

Advertisement