பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு
நாமக்கல்: திருச்செங்கோடு அடுத்த கொன்னையாறு பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி வசந்தா, 65; இவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, நுழைவு வாயிலில் இருந்த போலீசார், அவர் பையை சோதனை செய்தனர். அதில், பெட்ரோல் நிரப்பிய கேன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார், மூதாட்டி வசந்தாவிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், 'தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு நீண்ட நாட்க-ளாக, பட்டா கேட்டு மனு அளித்தும், நடவடிக்கையும் இல்லை. அதனால், பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்தேன்' என, தெரிவித்தார். அவருக்கு, போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்-பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement