மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கீழ்பையூரை சேர்ந்தவர் சின்னபாப்பா, 55; இவரது மகள் சாந்தி. இவரது கணவர் பெல்-லாரம்பள்ளியை சேர்ந்த பூங்காவனம், 47; குடிப்-பழக்கத்தால் மனைவி சாந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். மூன்று நாட்க-ளுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட சாந்தி, கீழ்பையூரிலுள்ள தாய் வீட்-டுக்கு சென்று விட்டார். மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர சென்றார்.
அப்போதும் குடிபோதையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த மாமியார் சின்னபாப்பாவிடம், 'நீ இருக்கும் வரை மனைவியை என்னுடன் வாழ விட மாட்டாய்' எனக்கூறி விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் சின்னபாப்பா ரத்த வெள்-ளத்தில் சரிந்தார். அப்பகுதியினர் மீட்டு கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் பூங்-காவனத்தை கைது செய்தனர்.
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு