பிளேக் மாரியம்மன் கோவிலில் வரும் 12ல் குண்டம் திருவிழா
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வரும், 12ம் தேதி நடக்கிறது.
கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த, பிப்., மாதம் 27ம் தேதி, கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜைகளுடன் துவங்கியது. இன்று, 4ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடு நடக்கிறது.
நாளை, 5ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, அம்மன் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 7ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 10ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, விநாயகர், முருகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. அன்று, இரவு 7:00 மணிக்கு, சக்தி விந்தை ஆற்றில் இருந்து கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு மற்றும் அம்மன் பூ பல்லக்கில் திருவீதி உலா அழைத்து வருதல் நடக்கிறது.
வரும், 11ம் தேதி, காலை 7:00 மணிக்கு, மாவிளக்கு அலங்கார பூஜை, மாவிளக்கு அழைத்து வருதல், கோவில் மண்டபத்தில் பூ அலங்காரம், மற்றும் பொங்கல் விழா நடக்கிறது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, குண்டம் திறப்பு, மதியம் 2:00 மணிக்கு, கணபதி ஹோமம் மாலை 6:00 மணிக்கு, குண்டத்திற்கு பூ போடும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.
வரும், 12ம் தேதி, அதிகாலை 2:30 மணிக்கு, பூச்சென்று மற்றும் கிரகங்கள் அழைத்து வர ஆற்றுக்குச் செல்லும் நிகழ்வு நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தல் மற்றும் அக்னி அபிஷேகம் நடக்கிறது.
13ம் தேதி, காலை 7:00 மணிக்கு, மஞ்சள் நீராடும், 14ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை