டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு

வேலுார்: வேலுார் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் தகவல் வந்தது. அதில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறப்பட்டிருந்தது.


இதை நம்பி, 6.38 லட்சம் ரூபாயை அனுப்பினார். பணம் திரும்ப வராததால், கும்பல் அழைத்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்தார்.

Advertisement