மாநில அளவிலான கூடைப்பந்து 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி.,
கோவை; மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி முதல் பரிசை தட்டியது.
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 49வது மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான 'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி, இரு நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், மாநிலத்தில் உள்ள 'டாப்' எட்டு அணிகள் பங்கேற்றன.
'லீக்' முறையிலான போட்டிகளின் நிறைவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, முதல் பரிசை தட்டியது. இரண்டாம் பரிசை, சென்னை டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி அணியும், மூன்றாம் பரிசை திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி அணியும், நான்காம் பரிசை திருச்சி புனித ஜோசப் கல்லுாரி அணியும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க துணை தலைவர் அசோக், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் கண்ணய்யன், முதல்வர்(பொ) செங்குட்டுவன் ஆகியோர் வழங்கினர்.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை