வீழப்போகுது மரம்; அகற்றினால் நலம்!

வீணாகும் தண்ணீர்
திருப்பூர் காங்கயம் ரோடு - தாராபுரம் ரோடு சந்திப்பு, மாரியம்மன் கோவில் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- நித்யஸ்ரீ, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா எதிரில் குழாய் உடைந்து, தண்ணீர் 24 மணி நேரமும் வீணாகிறது.
- ரமேஷ், பல்லடம் ரோடு. (படம் உண்டு)
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், பரமன் ஊற்று கருப்பராயன் கோவில் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- அமரன், கோவில்வழி. (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் ரயில் பாலத்தின் கீழ் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகிறது. கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.
- ரஞ்சித், அணைப்பாளையம். (படம் உண்டு)
விழும் நிலையில் மரம்
சூசையாபுரம் இரண்டாவது வீதியில் மரத்தின் அடிப்பாகம் ஓட்டையாக எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. விழும் முன் வெட்டி அகற்ற வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், சூசையாபுரம். (படம் உண்டு)
குழியை மூடுங்க
மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா முன்புறம் சாலையில் உள்ள குழியை மூட வேண்டும். நடுரோட்டில் உள்ள குழியால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.
- தேவராஜ், பார்க் ரோடு. (படம் உண்டு)
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை