இருக்கன்குடி அணையில் வளரும் முள் செடிகள்

சாத்துார்: இருக்கன்குடி அணையில் வளரும் முள் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைப்பாறு அர்ச்சுனா நதி ஆகிய இரு நதிகளுக்கு இடையே இருக்கன்குடி அணை கட்டப்பட்டுள்ளது. இருக்கன்குடி அணையின் மூலம் பல நுாறு ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்ததால் அணையில் வளர்ந்திருந்த முள் செடிகள் வேர் அழுகி கருகிவிட்டன.
தண்ணீரில் மூழ்கி அழுகிய முள் செடிகள் தற்போது மீண்டும் துளிர்விட்டு முளைக்கத் துவங்கி உள்ளன. முள் செடிகள் முழுமையாக வளர்ந்தால் அணையில் தேங்கியுள்ள குறைந்த அளவு தண்ணீரையும் உறிஞ்சி விடும் அபாயம் உள்ளது. எனவே அணையில் புதியதாக முளைத்து வரும் முள் செடிகளை முளையிலேயே கிள்ளி எறியபொதுப்பணித்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை