கடை உரிமையாளரிடம் பணம் பறித்த நபர் கைது
குமரன் நகர்,:ஜாபர்கான்பேட்டை, பாரி நகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி, 54. இவர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகர் 69வது தெருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2ம் தேதி மளிகை கடைக்கு வந்த சுரேஷ் என்பவர், முபாரக் அலியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியை காட்டி மிரட்டி, முபாரக் அலியின் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பறித்தார்.
இதில், முபாரக் அலி சத்தம் போடவே, கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை சுரேஷ் உடைத்தார்.
இது குறித்து குமரன் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், ஆர்.வி.நகரைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர், மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உட்பட, ஆறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இவரிடம் இருந்து, கத்தி மற்றும் 150 ரூபாய் மீட்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அங்காளம்மன் சாலையை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
-
டி.என்.பி.எல்.,நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு
-
கரூரில் கூலிங்கிளாஸ் கண்ணாடி விற்பனை
-
உளுந்து அறுவடையில் விவசாயிகள் மும்முரம்
-
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
-
கரூர் வேலுசாமிபுரத்தில் கைத்தறி; பொது வசதி மையம் திறப்பு விழா
Advertisement
Advertisement