கூடுதல் வகுப்பறை திறப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பி.எஸ்., திம்மசந்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம், 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் ஆகியோர், வகுப்பறைகளை மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். சூளகிரி வடக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் நாகேஷ், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement