ஆபாச வீடியோ பார்த்த 13,000 பேருக்கு எச்சரிக்கை
சென்னை: பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக, ஆபாச படம், வீடியோ பதிவிறக்கம் செய்த, 13,000 பேரை, போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட, 43,000 பேர், போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த, 13,000 பேருக்கு, எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
வியாபார நோக்கத்தில் ஆபாச படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்வது தெரியவந்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஆறுதல் அளித்த தங்கம்; இன்று பவுனுக்கு ரூ.360 குறைவு
-
2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
Advertisement
Advertisement