ஸ்குவாஷ்: அபே சிங் ஏமாற்றம்

கிறைஸ்ட்சர்ச்: சர்வதேச ஸ்குவாஷ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அபே சிங் தோல்வியடைந்தார்.
நியூசிலாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அபே சிங், ஸ்பெயினின் இகர் பஜாரெஸ் மோதினர்.
முதல் செட்டை 9-11 என இழந்தார் அபே சிங். அடுத்த செட்டை 12-14 என போராடி கோட்டை விட்டார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 10-12 என நழுவவிட்டார். முடிவில் அபே சிங் 0-3 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஜப்பானின் டி சுகேயிடம் 1-3 என்ற (2-11, 11-7, 7-11, 1-11) கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement