துாய்மை பணியாளர்களுக்குஇலவச மருத்துவ முகாம்


துாய்மை பணியாளர்களுக்குஇலவச மருத்துவ முகாம்

திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும், பெண் துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் அருள் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு முகாமை துவக்கி வைத்தார். இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர்.சுகுணா தலைமையில், நகராட்சி பெண் பணியாளர்களுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில், 125க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement