கோர்ட் வளாகத்தில் நாளை மக்கள் நீதிமன்றம்

புதுச்சேரி : புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நாளை (8 ம் தேதி) மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

மாவட்ட நீதிபதி (பொறுப்பு) அம்பிகா செய்திக்குறிப்பு;

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், ஏனாம் நீதிமன்ற வளாகத்தில் நாளை (8ம் தேதி) காலை 10:00 மணிக்கு, மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், சிவில் வழக்குள் மற்றும் வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளன.

தங்கள் வழக்குகளை சமாதான முறையில் தீர்த்துக்கொள்ள விரும்பும் வழக்காடிகள், தங்களின் வழக்கு நடக்கும் நீதிமன்றத்தை வழக்கறிஞருடன் அணுகி நீதிமன்றம் மூலம் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறும், விண்ணப்பித்து தங்கள் வழக்குகளை சமாதான முறையில் தீர்வு பெற்று பயனடையலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement