முதியவரை தாக்கிய வாலிபர் கைது

விழுப்புரம் : காணை அருகே முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

காணை அருகே ஒருகோடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 63; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்,45; என்பவருக்கும் அருகருகே நிலம் உள்ளது.

இங்குள்ள ஏரியில் இருந்து வரும் நீரை யார் முதலில் பயன்படுத்துவது என்ற பிரச்னையில் வெங்கடேசன் பாதையில் ஆறுமுகத்தை தாக்கினார். காணை போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.

Advertisement