ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டும் பிரசாந்த் கிஷோர்: துரை வைகோ காட்டம்

மதுரை: 'பிரசாந்த் கிஷோர் ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர். தமிழகத்தில் அவர் சொல்வது நடக்காது' என்று ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ தெரிவித்தார்.
பிளாஸ்டிக் லைட்டரால் அந்த மக்களுக்கு பாதிப்பு வந்தது. மத்திய அரசிடம் முறையிட்டு பிளாஸ்டிக் லைட்டரை இறக்குமதி செய்வதற்கான தடையை கொண்டு வர பேசினேன். இதனை விற்பனை செய்வதற்கான தடையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தேன். கண்டிப்பாக அதற்கான முயற்சி எடுப்பேன்.
பிரசாந்த் கிஷோர் பொலிடிக்கல் அனலிஸ்ட். அவர் சொல்வதெல்லாம் 100க்கு 100 நடப்பது கிடையாது. பிரசாந்த் கிஷோர் ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர். தமிழகத்தில் அவர் சொல்வது நடக்காது. விஜயை பொறுத்தவரை மிகப்பெரிய நட்சத்திரம். அவர் பின் நிறைய இளைஞர்கள் உள்ளனர்.
அவருடைய கொள்கைகளை சிந்தாந்தங்களை சொல்லி இருக்கிறார். அதை வரவேற்கிறோம். இந்த அரசை எதிர்க்கிற எதிர்க்கட்சியாக அவருடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.











மேலும்
-
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவக்கம்
-
இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன்; 3வது முறையாக மகுடம் சூடியது
-
3வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு: ஆந்திர எம்.பி., அறிவிப்பு
-
ஹரியானாவில் 14வது மாடியில் இருந்து விழுந்த ஜப்பான் பெண் பலி!
-
வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர் சுட்டுப்பிடிப்பு