ஊராட்சி துவக்கப்பள்ளியில்ரூ.34.23 லட்சத்தில் 2 வகுப்பறை


ஊராட்சி துவக்கப்பள்ளியில்ரூ.34.23 லட்சத்தில் 2 வகுப்பறை

கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி ஒன்றியம், நபார்டு நிதி உதவி திட்டம், 2024 - 2025ம் ஆண்டு நிதியில் இருந்து, அகசிப்பள்ளி பஞ்., ராயகோட்டையன் கொட்டாய் கிராமத்தில், 34.23 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 2 வகுப்பறை கட்டும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி,
எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், கவுன்சிலர் மகேந்திரன், பி.டி.ஏ., தலைவர் கோவிந்தன், தலைமை ஆசிரியர் சசிகலா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement