மின் ஒப்பந்த தொழிலாளர்பேச்சு மீண்டும் ஒத்திவைப்


மின் ஒப்பந்த தொழிலாளர்பேச்சு மீண்டும் ஒத்திவைப்பு


மேட்டூர்:மேட்டூர் அனல்மின் நிலைய நுழைவாயில் உட்பகுதியில் அமர்ந்து பணிநிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், 200க்கும் மேற்பட்டோர் கடந்த, 28 முதல் நேற்று வரை, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண, கடந்த, 5ல் சேலம், கோரிமேடு, தொழிலாளர் உதவி கமிஷனர் சண்பகராமன்(சமரசம்) தலைமையில் முதல்கட்ட பேச்சு நடந்தது. தொடர்ந்து, 7ல், மீண்டும் நடந்த கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், 11க்கு(நாளை) பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement