பஞ்சாபில் சர்வதேச போதை கடத்தல் மன்னன் கைது!

புதுடில்லி: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ., போலீசாரால் தேடப்படும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங், கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு கொகைன் என்ற போதைப் பொருள் கடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளான்.
கடந்த மாதம் 26ம் தேதி, அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த செஹனாஷின் கூட்டாளிகளான, அம்ரித் பால் சிங், தக்திர் சிங், சர்ப்சித் சிங், பெர்னான்டோ வல்லதரேஸ் ஆகிய 4 பேரை அமெரிக்கா போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 391 கிலோ மெத்தம்பெட்டமைனும், 109 கிலோ கொகைன் மற்றும் 4 ஆயுதங்களை அவர்களின் வீடுகளில் பறிமுதல் செய்தனர். இந்த சூழலில் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங் இந்தியாவுக்கு தப்பியோடி வந்து, தலைமறைவாகினான்.
அவன் இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்த பஞ்சாப் மாநில போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடந்து, அவனிடம் விசாரித்து வருகின்றனர். அவன் மீது பல்வேறு நாடுகளில் வழக்குகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


மேலும்
-
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு
-
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை
-
எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?
-
ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
-
திருச்செந்தூர் மாசித்திருவிழா;பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்
-
வங்கியில் நகை அடகு வைக்க புதிய விதிமுறை; வாபஸ் பெற ரிசர்வ் வங்கிக்கு சீமான் வலியுறுத்தல்