கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை

4

கரூர்; கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


கரூர் மாவட்டம் அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தாந்தோன்றி மலையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கம் போல் கல்லூரி செல்ல பஸ் ஏறிய அவர், பொன்நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார்.


பின்னர், சக மாணவிகள் சிலருடன் சேர்ந்து கல்லூரி நோக்கி நடந்து சென்று கொண்டிருத்நார். அப்போது கார் ஒன்றில் வந்த வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். என்ன நடக்கிறது என்பதை அறியாத மாணவி, பயத்தில் கத்தினார்.


அபயக்குரலைக் கேட்ட சக மாணவிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement