வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு

சென்னை: பா.ம.க., நிழல் பட்ஜெட்டை இன்று வெளியிட்டார் கட்சியின் தலைவர் அன்புமணி.
பா.ம.க., வெளியிட்டுள்ள இந்த பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் அரசுக்கும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
*படித்துவிட்டு 5 ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
*குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
* பெயர்ப்பலககைளை தமிழில் எழுதாத கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம். 3 முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.
* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். இனி ஒரு சிலிண்டர் ரூ.318 க்கு கிடைக்கும்.
* மே 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
உள்ளிட்ட 109 தலைப்புகளில் 359 யோசனைகள் பா.ம.க., நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சாலையில் கிடந்த தங்க நெக்லஸ்; போலீசில் ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு
-
அரிய வகை மரபியல் நோயால் லக்சம்பர்க் இளவரசர் மரணம்
-
திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; சேவைகள் பாதித்ததாக பயனர்கள் அதிருப்தி
-
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் பெங்களூருவில் கைது
-
வாக்காளர் பட்டியல் விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு
-
மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் எழுதி கடமை முடிப்பதற்கு கண்டனம்: சீமான்