வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு

1

சென்னை: பா.ம.க., நிழல் பட்ஜெட்டை இன்று வெளியிட்டார் கட்சியின் தலைவர் அன்புமணி.

பா.ம.க., வெளியிட்டுள்ள இந்த பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் அரசுக்கும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

*படித்துவிட்டு 5 ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

*குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

* பெயர்ப்பலககைளை தமிழில் எழுதாத கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம். 3 முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.

* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். இனி ஒரு சிலிண்டர் ரூ.318 க்கு கிடைக்கும்.

* மே 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

உள்ளிட்ட 109 தலைப்புகளில் 359 யோசனைகள் பா.ம.க., நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement