முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலையின் மூன்று கேள்விகள்!

40

சென்னை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என்று முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ள நிலையில், அவருக்கு தமிழக பா.ஜ., அண்ணாமலை 3 கேள்விகள் கேட்டுள்ளார்.


@1brஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;


பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.


முதல் கேள்வி:


திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.


இரண்டாவது கேள்வி:


மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?


உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?


மூன்றாவது கேள்வி:


யார் அந்த சூப்பர் முதல்வர்?


ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement