விபத்தில் இருவர் பலி
கோவை : மதுரை சோழவந்தான், தெற்கு ராதா தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன், 24. கோவை நவஇந்தியாவில் உள்ள வங்கியில், ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக பீளமேடு, ஸ்ரீ நகர் பழையூர் ரோட்டில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சுந்தரேஸ்வரன் பைக்கில் நஞ்சுண்டாபுரம் ரோடு வழியாக போத்தனுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே, சுந்தரேஸ்வரன் உயிரிழந்தார். போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
* விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மதியம் சேரன் மாநகர், வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சுப்பிரமணி, 59 என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ் வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. சுப்ரமணி உயிரிழந்தார். புகாரின் பேரில், போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீசார் விளாங்குறிச்சி காந்தி தெருவை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜ், 25 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ரூ.318க்கு சமையல் காஸ் வழங்கப்படும்
-
நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு
-
இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி; அவர் சொல்வது இது தான்!
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ