காஞ்சிபுரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

7


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரவுடியை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா. பிரபவ ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்த இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இன்று மாநகராட்சி பகுதியான திருக்காலிமேடு பகுதியில் அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. தொடர்ந்து அவர் மீது வெடிகுண்டு வீசியதுடன், அரிவாள், கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கொலை கும்பலை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement