வங்கி ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்

தேனி; தேனி பெரியகுளம் ரோடு கனரா வங்கி முன், வங்கி ஊழியர்கள் ஒன்றியங்களின் கூட்டமைப்பு சார்பில், வாரத்திற்குஐந்து வேலை நாட்களை அமல்படுத்த வேண்டும், ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

வங்கிகளை ஏமாற்றும் வராக்கடன் பெரு முதாலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் விக்னேஷா தலைமை வகித்தார்.

தேனி மண்டலச் செயலாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பணி நேரத்திற்கு பின் ஆர்பபாட்டம் நடந்ததால், பணிகளில் பாதிப்பு இல்லை.

Advertisement