60 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேரோட்டம் சின்னசேலத்தில் பக்தர்கள் பரவசம்

சின்னசேலம்,: சின்னசேலத்தில் 60 ஆண்டுகளுக்கு பின்பு தேரோட்டம் நடந்தது.
சின்னசேலம் காமாட்சி அம்மன் சமேத கங்காதீஸ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த 8ம் தேதி பெருமாள் மற்றும் சிவனுக்கு அபிஷேகத்துடன் யாகசாலை பூஜையுடன்விழா துவங்கியது.தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பல்வேறு வாகனங்களில்பெருமாள் வீதி உலா நடந்தது. இதே போல் சிவன் கோவிலில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பெருமாள் மற்றும் சிவன் கோவில்களில் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகளில் தேர் வடம் பிடிக்கப்பட்டது. 60ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி
-
''நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை'' : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்
-
அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு