திருக்காஞ்சியில் தேரோட்டம் இன்று மாசி மக தீர்த்தவாரி

வில்லியனுார் : திருக்காஞ்சியில் இன்று 12ம் தேதி, காலை மாசிமக தீர்த்த வாரி நடக்கிறது.
வில்லியனுார், திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி மாலை பாரிவேட்டை, 8ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 10ம் தேதி இரவு திருக்கல்யாண உற்வசம் நடந்தது.
நேற்று காலை தேர் திருவிழா நடந்தது. வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வடம் பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தார். திருக்காஞ்சி முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பகல் 12:15 மணிக்கு நிலையை அடைந்தது.
முக்கிய விழாவான மாசி மக தீர்த்தவாரி திருவிழா இன்று (12ம் தேதி) நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு மேல் மாசி மக தீர்த்தவாரி உற்சவம், அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சார்யார், கோவில் நிர்வாக அதிகாரி சரவணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
மேலும்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி
-
''நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை'' : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்
-
அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு