நான்கு வழிச்சாலையில் பயன்படாத கழிப்பறை; மதுரை ரோட்டில் பயணிகள் அவதி

பரமக்குடி; பரமக்குடியில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச் சாலையில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளதால் மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. பரமக்குடி வரை நான்கு வழிச் சாலை உள்ள நிலையில் தொடர்ந்து ராமேஸ்வரம் இருவழிச்சாலையாக செல்கிறது.
இந்நிலையில் ரோடு பராமரிப்பிற்காக டோல் கேட் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக இங்குள்ள கழிப்பறைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வாகனங்கள் நிறுத்துமிடம், வாகன ஓட்டிகள் ஓய்விடம், உணவகங்கள் மற்றும் கழிப்பறைகள் என அனைத்தும் வீணாகி வருகிறது. இதே போல் கோடைகாலமாக உள்ளதால் நான்கு வழிச்சாலையில் உள்ள செடிகளும் பராமரிக்கப்படாமல் கருகி வருகிறது.
எனவே துறை அதிகாரிகள் கழிப்பறை உட்பட அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி
-
''நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை'' : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்
-
அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு