திருவாடானையில் மழை

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26 ஆயிரத்து 650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யபட்டது. விவசாய பணிகள் முடிந்து ஒரு மாதமாக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது.

விவசாயிகள் கூறுகையில், அறுவடை பணிகள்முடிந்ததால் மழையால் பாதிப்பு இல்லை. சில கிராமங்களை தவிர பெரும்பாலான கிராமங்களில் கோடை விவசாயம் செய்வதில்லை என்றனர்.

Advertisement