உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்

கோரக்பூர்: கடந்த 8 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.
தேசிய துாய்மை காற்று திட்டம் குறித்த தேசிய மாநாடு கூட்டம் கோரக்பூரில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாவது:
மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ள நிலையிலும் கடந்த 8 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலத்தின் வனப்பகுதி கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பாரம்பரிய மரங்கள் நடும் முயற்சி, , உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வனத்துறை ஆய்வு மையம் மற்றும் சத்தீஸ்கர் பல்கலை கண்காணிப்பில் நடந்தது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, காற்றின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உயிரியல் பல்வகைமையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக மாநிலம் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த முன்முயற்சி, தேசிய பசுமை இந்தியா திட்டம் போன்ற தேசிய இலக்குகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மாநிலத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இந்நடவடிக்கையால் அதிகரித்த வனப்பகுதி, சுற்றுச்சூழல் சமநிலை, நீர் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஆதித்யநாத் பேசினார்.





மேலும்
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்
-
திண்டுக்கல்லில் போக்குவரத்து விதி மீறியதாக 2416 வழக்குகள்: ரூ.6 லட்சம் அபராதம்
-
டோலி கட்டி தூக்கிச்சென்றும் பெண் உயிரை காப்பாற்ற முடியவில்லை; கொடைக்கானல் கிராமத்தினர் கண்ணீர்!
-
ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு
-
பார்க்கிங் பிரச்னையால் உயிரிழந்த விஞ்ஞானி: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்