6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்

புதுடில்லி: '' வினாத்தாள் கசிவு காரணமாக ஆறு மாநிலங்களில் உள்ள குழந்தைகள் 85 லட்சம் பேரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. வினாத்தாள் கசிவு என்பது, நமது இளைஞர்களுக்கு பெரும் ஆபத்தான பத்மவியூகமாக மாறி உள்ளது.
வினாத்தாள் கசிவு மூலம், கடினமாக உழைக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை, நிச்சயமற்றதன்மை, அழுத்தம் ஏற்படுவதுடன் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதை தடுக்கிறது. கடின உழைப்பை விட நேர்மையற்ற செயலே சிறந்தது என்ற தவறான செய்தியை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்கிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நீட் வினாத்தாள் கசிவு, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி ஓராண்டு முடியவில்லை. நமது போராட்டத்திற்கு பிறகு, மோடி அரசானது அதற்கு தீர்வு எனக்கூறி ஒரு புதிய சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ஆனால், சமீபத்திய பல வினாத்தாள் கசிவுகள் அந்தச் சட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபித்து உள்ளன.
இந்த தீவிரமான பிரச்னை என்பது தோல்வியை காட்டுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கையை எடுக்கும் போது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தேர்வுகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பது என்பது நமது குழந்தைகளின் உரிமை. அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.











மேலும்
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?