மதுராந்தகம் - உத்திரமேரூர் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
மதுராந்தகத்திலிருந்து நெல்வாய் வழியாக, உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையை புழுதிவாக்கம், வேடந்தாங்கல், நெல்வாய், சூரை, புதுப்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என, அதிக வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன.
இதில், கக்கிலப்பேட்டை முதல் சன்பார்மா மாத்திரை தொழிற்சாலை வரை, 2 கி.மீ., துாரம், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
அடிக்கடி வாகன விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, இந்த சாலையை புதிதாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
10,000 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி தனிநபர் செயல்பாட்டுக்கு எதிராக போராட்டம்
-
பயிர்களை நாசமாக்கும் குரங்குகள் திருப்போரூர் விவசாயிகள் வேதனை
-
தனி நபர் வீட்டு மண் அகற்றிய மாநகராட்சி பணியாளர்கள்
-
ரயில்கள் தொடர்ந்து கண்காணிப்பு; ஒரு வாரத்தில் சிக்கிய 35 கிலோ கஞ்சா
-
குற்றத்தடுப்பு நடவடிக்கை; மாவட்ட போலீசார் தகவல்
-
முதல்வர் எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்: அண்ணாமலை