பைக் திருட்டு

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகில் பைக் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியாப்பிள்ளை மகன் வெங்கடேசன், 32; இவருக்கு சொந்தமான பைக்கை நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில், வீட்டின் முன் நிறுத்தி விட்டு, துாங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது அவரது 'பைக்' காணாமல் போனது தெரிந்தது. இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement