மாணவி புகைப்படம் சித்தரித்து மிரட்டல்: பெரம்பலுார் வாலிபர் கைது பெரம்பலுார் வாலிபர் கைது

தேனி: தேனியை சேர்ந்த கல்லுாரி மாணவியிடம் பழகி, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டிய பெரம்பலுாரை சேர்ந்த கம்யூட்டர் ஆப்பரேட்டர் அஸ்வின் 27, என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவரிடம் சமூக வலைதளம் மூலம் பெரம்பலுாரை சேர்ந்த அஸ்வின் அறிமுகமானார். தொடர்ந்து நட்பாக பழகி வந்த நிலையில், புகைப்படங்களை அனுப்புமாறு அஸ்வின் கூறினார். காதலனை நம்பி மாணவி புகைப்படங்களை அனுப்பினார். அதனை பதிவு செய்து கொண்டு மாணவியை அஸ்வின் மிரட்ட துவங்கினார். மிரட்டல் சம்பவம் பற்றி மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் மாணவியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு வாலிபர் அனுப்பினார்.
மாணவியின் தந்தை தேனி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் அஸ்வினை கைது செய்தனர்.
மேலும்
-
பயணங்கள் இனிதாகும்!
-
கட்டுமான ஒப்பந்தத்துக்கு மாற்று வழி தெரியாமல் வீடு வாங்குவோர் அவதி! கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ரெடிமேட் கம்பிகளை வாங்குவதில் கவனிக்க…
-
வாரிசு சான்று வழங்க ரூ.3,500 லஞ்சம்: குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை அமுக்கிய போலீசார்
-
ஜோதிடரை பரிகார பூஜைக்கு அழைத்து ஆபாச படம் பிடித்து பணம் பறித்த பெண்
-
மோசடி நிதி நிறுவனங்களில் சிக்கிய ரூ.14,000 கோடி; முதலீட்டாளர் தவிப்பு
-
பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் 'ஆப்சென்ட்'