தேனியில் அலைபேசி திருடர்கள் கைது

தேனி: தேனி அல்லிநகரம் ரகுநாதன் 50, ஆட்டோ டிரைவர். கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நேற்று அதிகாலை நின்றிருந்தார்.

அலைபேசியை ஆட்டோவில்வைத்து விட்டு அருகில் இருந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த பெரியகுளம் அழகர்சாமிபுரம் சந்தானம் 27, பள்ளிவாசல் மேற்கு தெரு நுார் முகமது 22, இருவரும் ரகுநாதனிடம் பேச்சுக்கொடுத்தனர். திடீரென ஆட்டோவில் இருந்த அலைபேசியை எடுத்துக்கொண்டு ஓடினர்.

அங்கிருந்தவர்கள் பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். ரகுநாதன் புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement