5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

5

சென்னை: 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:

* முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ரூ.10 கோடியில் தமிழக முந்திரி வாரியம் அமைக்கப்படும்.



* மானிய விலையில் சோலார் பம்ப்செட் வழங்கப்படும்.


* பொதுமக்களுக்கு 6 காய்கறி விதை தொகுப்பு வழங்கப்படும்.


* பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு


* பலா மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.


* ஊட்டச்சத்துள்ள வெண்ணைப்பழ சாகுபடியை தென்காசி, திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு.


* 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.


* நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும். இதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.

* சிறு, குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.10.50 கோடி ஒதுக்கீடு

* இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த ரூ.17.37 கோடி ஒதுக்கீடு.

* காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப்பாசனப் பகுதிகளிலும் உள்ள "சி" மற்றும் "டி" பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ரூ.13.80 கோடி ஒதுக்கீடு.

* புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு

* 63,000 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன் பெரும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.


* சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.6.16 கோடி ஒதுக்கீடு


* காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்கு ரூ.1.35 கோடி ஒதுக்கீடு


* நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.68 கோடி ஒதுக்கீடு


* வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.2,75 கோடி ஒதுக்கீடு



* திறந்த வெளி பாசன கிணறுகளை புனரமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு



* வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.


* 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். இதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு


* தமிழகத்தில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு

* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 இலட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.


* இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை 10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement