துபாயில் இருந்து கடத்திய ரூ.1.2 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை, துபாயில் இருந்து சென்னைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகாலை 2:00 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணியரின் உடைமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் சென்று திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். அவர் வைத்திருந்த உடைமைகளை சோதித்தபோது எதுவும் சிக்கவில்லை. அவர் கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார். பாட்டிலை திறந்து பார்த்ததில் தங்க பசைகள் கடத்தியது தெரியவந்தது. அதன் எடை 1.5 கிலோ. சர்வதேச மதிப்பு 1.23 கோடி ரூபாய் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement