நந்தனம் கல்லுாரியில் 29ல் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 29ம் தேதி நடக்கிறது.
இம்முகாம், நந்தனம் அரசு கலை கல்லுாரியில், காலை 8:00 - 3:00 மணி வரை நடக்கிறது. இதில், 200 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 2,000 காலி பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
எட்டாம் வகுப்பு முதல், பொறியில் பட்டம், கணினி அறிந்தவர், தையல் கற்றவர் என, அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
அனுமதி இலவசம் என்பதால், பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement