ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசிய முதல்வர் சித்து மீது புகார்

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் கலவரத்தை உருவாக்குகின்றனர் என்று பேசிய, முதல்வர் சித்தராமையா மீது, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ், கடந்த 17ம் தேதி முதல்வர் சித்தராமையா சட்டசபையில் பேசுகையில், 'மாநிலத்தில் குற்ற விகிதத்தை குறைப்பது எங்கள் நோக்கம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள், இந்த சமூகத்தில் கலவரத்தை உருவாக்குகின்றனர். வெறுப்பு பேச்சு பேசுகின்றனர்' என்று கூறினார். முதல்வர் பேச்சுக்கு பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசிய முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடும்படி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் கிரண் என்பவர் நேற்று புகார் அளித்து உள்ளார்.
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது