வழிவிடுவதில் இருதரப்பு தகராறு வாலிபரை வெட்டியோர் கைது
அம்பத்துார்,அம்பத்துார், ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் அஜய், 25; ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தவர்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், 24, ஐ.சி.எப்.,பைச் சேர்ந்த ஜீவா, 24, ஆகியோருடன் மது அருந்திவிட்டு, கடந்த 16ம் தேதி நள்ளிரவு பைக்கில் சென்றுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 32, தனது நண்பர்களுடன் பைக்கில் சென்றுள்ளார். ஒரகடம் அருகே வழிவிடுவதில் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், அஜய், தினேஷ், ஜீவா ஆகிய மூவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஸ்ரீதரின் இடது கையில் வெட்டி விட்டு தப்பினர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விசாரித்த அம்பத்துார் போலீசார், தலைமறைவாக இருந்த அஜய், தினேஷ், ஜீவா ஆகியோரை கைது செய்து,நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement