சாலை வளைவுகளில் கட்டுப்பாடு தேவை

கப்பாங்கோட்டூர்:மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கூட்டு சாலையில் இருந்து, கண்டிவாக்கம் கிராமம் வழியாக, கப்பாங்கோட்டூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலையில், ஐந்திற்கும் மேற்பட்ட அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில், போதிய எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடைகளும் இல்லை.
சமீபத்தில், எடையார்பாக்கம் கூட்டு சாலை முதல், கப்பாங்கோட்டூர் சாலை வரையில், புதிதாக சாலை போட்டுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.
இதனால், சாலை வளைவுகளில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, எடையார்பாக்கம் கூட்டு சாலை முதல் கப்பாங்கோட்டூர் இடையே வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு
Advertisement
Advertisement