சித்தோடு வாரச்சந்தையில்35 தராசு, படிகற்கள் பறிமுதல்
சித்தோடு வாரச்சந்தையில்35 தராசு, படிகற்கள் பறிமுதல்
ஈரோடு:ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள் சித்தோடு வாரச்சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் மின்னணு தராசுகள், தராசு கற்கள், அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு, பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்தனர்.
மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகள்-19, மேசை தராசு-1, எடை கற்கள்-10, படிகள், அளவைகள்-5 என, 35 இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மின்னணு தராசுகள், தராசு கற்கள், அளவைகள் ஆகியவற்றை மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் சட்டப்படி அபராதம், பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வியாபாரிகளுக்கு
அறிவுரை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு
-
நகை விற்பனை ரசீதில் எச்.யூ.ஐ.டி.,எண் இடம் பெற வழக்கு
Advertisement
Advertisement