பாம்பு பிடி வீரர் நாகம் தீண்டி பரிதாப பலி

கோவை:கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 39; திருமணமானவர். இவர், பாம்பு பிடிப்பதில் நிபுணர். கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜநாகம், நல்லபாம்பு, கட்டுவிரியன், கொம்பேறி மூர்க்கன் உள்ளிட்ட விஷம் நிறைந்த ஆயிரக்கணக்கான பாம்புகளை பத்திரமாக மீட்டு, வனப்பகுதிக்குள் விடுவித்துள்ளார்.
கடந்த 17ம் தேதி, கோவை அருகே தொண்டாமுத்துார் குடியிருப்பு பகுதியில் புகுந்த நாகப்பாம்பை மீட்க சென்ற சந்தோஷ், பாம்பிடம் கடிபட்டார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இவரது குடும்பத்துக்கு, அரசு தரப்பில் உதவி செய்ய வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
Advertisement
Advertisement