கடல் ஆமைகள் அடுத்தடுத்து இறப்பு
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக கடல் ஆமைகள் அதிகளவு இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. துாத்துக்குடி முள்ளக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
ஆலிவ் ரெட்லி வகை ஆமை, இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்தபோது மீனவர்களின் வலைகளில் சிக்கி இறந்திருக்கலாம் என, அவர்கள் கூறினர். திருச்செந்துார் அருகே வீரபாண்டியபட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. ஆமையை வனத்துறையினர் கைப்பற்றினர்.
மூன்று மாதங்களில் மட்டும் துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. உரிய ஆய்வு நடத்தி ஆமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளியுறவு கொள்கையில் எரிசக்திக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
சோழிங்கநல்லுார் போக்குவரத்து ஆபீசில் அதிகாரிகள் இல்லாததால் அலைக்கழிப்பு
-
விளைச்சல் அமோகம் கேரட் விலை சரிவு
-
குழாய் பதித்த பள்ளம் சீரமைக்க ரூ.3 கோடி செலுத்தியது வாரியம்
-
பராமரிப்பில்லாத நிலத்தடி பூங்கா நடைபாதை வியாபாரிகளுக்கு உதவுமா?
-
போதையில் தகராறு மூன்று ரவுடிகள் கைது
Advertisement
Advertisement