கையில் ஈரம், செல்போனுக்கு சார்ஜ்: பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி

சென்னை: சென்னையில் ஈரம் தோய்ந்த கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முகுந்தன். இவரின் மூத்த மகள் அனிதா(14) எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந் நிலையில் சம்பவத்தன்று ஈரம்தோய்ந்த கையுடன், செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்க, கீழே மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தகவலறிந்த போலீசார், உயிரிழந்த அனிதாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து (1)
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
23 மார்,2025 - 22:05 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஏ.ஐ., நம்ம வேலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது
-
சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் 'கோலி சோடா' புதுமையால் புத்துயிர் பெறும் பாரம்பரியம்
-
15 லட்சம் ரூபாய் லஞ்சம்: தேசிய நெடுஞ்சாலை துறை மேலாளர் கைது
-
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் அச்சம்!
-
மாணவர்கள் எம்புரான் படம் முதல் ஷோ பார்க்கணும்: ரிலீஸ் நாளில் விடுமுறை விட்ட கல்லூரி
-
தேர்தலில் வெளிநாட்டு தலையீடு; இந்தியா, சீனா மீது பழி சுமத்தும் கனடா
Advertisement
Advertisement