நாக்பூரில் விலக்கி கொள்ளப்பட்டது ஊரடங்கு; இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்

நாக்பூர்; நாக்பூரில் 6 நாட்கள் கழித்து ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நாக்பூரில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
போராட்டத்தின் நீட்சியாக, இஸ்லாமிய மற்றும் ஹிந்து அமைப்புகள் இடையே மோதல் மூண்டு வன்முறையானது.அதைத் தொடர்ந்து, நந்தன்வன், இமாம்பாடா, கோட்வாலி, சக்கர்தாரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந் நிலையில், தேஷில், கணேஷ்பேத், யசோதரா நகர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (மார்ச் 23) பிற்பகல் 3 மணி முதல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக நாக்பூர் போலீஸ் கமிஷனர் ரவிந்தர் சிங்கால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பதற்றமாக கருதப்படும் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும்
-
சவுக்கு சங்கருக்கு மறைமுக ' அஜென்டா' : தமிழக காங்., தலைவர் குற்றச்சாட்டு
-
காங்., திரிணமுல் காங்., கட்சியினர் போராட்டம்; பரபரப்பானது பார்லி., வளாகம்
-
தி.மு.க.,வினர் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்; 24 மணி நேரமாகியும் நடவடிக்கை இல்லை; அறப்போர் இயக்கம் காட்டம்
-
கள் இறக்குவது குறித்து தமிழக சட்டசபையில் 'விறுவிறு' விவாதம்!