அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு விஜய் ஆதரவு

சென்னை: எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க., அரசு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், புறமுதுகு காட்டுவது ஏன்? என்று த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
@1brஅவரது அறிக்கை; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு, ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் பிரச்னைகளுக்கு தீர்வு தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்கவும் வாக்குறுதி அளித்தது.
அவற்றை நிறைவேற்றாத நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
1-4-2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு சி.பி.எஸ்., எனப்படும் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய ௮ம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி ௮திகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனதில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.
அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும்.
ஆனால், அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க., அரசு செய்ய முன்வரவில்லை. ௮தை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஒய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் ௮மல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 30ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க., அரசு ஏமாற்றி உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது.
எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க., அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? தி.மு.க., அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். ஒது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க., அரசுக்கு, இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதுபோன்ற பாராமுகச் செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனதில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (23)
டில்லி - ,
24 மார்,2025 - 10:54 Report Abuse

0
0
Reply
தி.ச.திருமலை முருகன் - ,
24 மார்,2025 - 04:52 Report Abuse

0
0
Reply
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
23 மார்,2025 - 22:23 Report Abuse

0
0
Reply
Narayanan KV - ,இந்தியா
23 மார்,2025 - 21:15 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
23 மார்,2025 - 21:06 Report Abuse

0
0
Reply
Mohanakrishnan - ,இந்தியா
23 மார்,2025 - 20:45 Report Abuse

0
0
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23 மார்,2025 - 23:56Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
23 மார்,2025 - 20:41 Report Abuse

0
0
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23 மார்,2025 - 23:55Report Abuse

0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
23 மார்,2025 - 19:25 Report Abuse

0
0
vijai hindu - ,
24 மார்,2025 - 06:32Report Abuse

0
0
Reply
தேவதாஸ் புனே - ,
23 மார்,2025 - 19:15 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
23 மார்,2025 - 19:01 Report Abuse

0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
காங்., திரிணமுல் காங்., கட்சியினர் போராட்டம்; பரபரப்பானது பார்லி., வளாகம்
-
தி.மு.க.,வினர் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்; 24 மணி நேரமாகியும் நடவடிக்கை இல்லை; அறப்போர் இயக்கம் காட்டம்
-
கள் இறக்குவது குறித்து தமிழக சட்டசபையில் 'விறுவிறு' விவாதம்!
-
அமெரிக்கக்காரனே ஆவின் நெய்யை தான் விரும்புறான்; சட்டசபையில் அமைச்சர் கலகல
Advertisement
Advertisement