சம்பா சாகுபடியில் வைக்கோல் விலை இரு மடங்கு அதிகரிப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமங்களில், சம்பா பட்ட நெல் சாகுபடிக்கான அறுவடை பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.
நெல் அறுவடைக்கு பின், கால்நடைகளுக்கான தீவனமாக கிடைக்ககூடிய வைக்கோலை, விவசாயிகள் விற்பனை செய்து அதன் வாயிலாக வருவாய் ஈட்டுவது வழக்கம்.
வாலாஜாபாத் ஒன்றியத்தின் பல பகுதிகளில், கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் நடவு செய்த நெல் பயிர்கள் தற்போது சில இடங்களில் அறுவடை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், உபரியாகும் வைக்கோலை விலைக்கு வாங்கும் கால்நடை பராமரிப்போர், சீசன் துவங்கியும் வைக்கோல் விலை குறையவில்லை என கூறுகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் அடுத்த கண்ணடியன்குடிசை விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டில், சொர்ணவாரி பட்ட அறுவடையின் போது, வைக்கோல் உருளை கட்டு ஒன்று 100 ரூபாய்க்கு விலை போனது. தற்போது சம்பா சாகுபடிக்கான நெல் அறுவடை துவங்கி உள்ள நிலையில், ஒரு கட்டு வைக்கோல் உருளை 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வைக்கோல் உருட்டும் இயந்திரத்திற்கு ஒரு உருளைக்கு கூலியாக 50 ரூபாய் போக, மீதம் 150 ரூபாய் விவசாயி கைக்கு கிடைக்கிறது.
முழு வீச்சில் நெல் அறுவடை பணிகள் நடைபெறும் போது, வைக்கோல் விலை குறைய வாய்ப்புள்ளது. விலை குறைய கால்நடை விவசாயிகள் காத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை