ரூ.1.30 கோடி மோசடி; நகை மதிப்பீட்டாளர் கைது
திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே தான் பணிபுரியும் வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து, 1.30 கோடி ரூபாயை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42; திருப்பத்துார் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார்.
கடந்த 2011 முதல், 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, அவர்களது வங்கி கணக்கில், 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. வங்கி முதன்மை மேலாளர் ராஜன் புகார்படி, திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
Advertisement
Advertisement