சைபர் கிரைம் குற்றம் குறித்து போலீசார் விழிப்புணர்வு பேனர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கிரைம் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு சைபர் குற்றம் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பிரதான சாலை சந்திப்புகளில், சைபர் கிரைம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கிரைம் போலீஸ் நிலையம் சார்பில், விழிப்புணர்வு குறித்து ‛பேனர் வைத்துள்ளனர்.
இதில், சைபர் குற்ற புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். தமிழக டி.ஜி.பி.,யின் சைபர் விழிப்புணர்வு பேச்சு, டிஜிட்டல் கைது குறித்து பிரபல சினிமா நடிகர் ஒருவரின் வீடியோ, சைபர் குற்றம் குறித்த வழிகாட்டல் உள்ளிட்டவற்றை இணையதளம் வாயிலாக காண்பதற்கு, ‛க்யூ ஆர்' கோடு பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளம் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
Advertisement
Advertisement